Monday, October 22, 2012

பிரார்த்தனை


மனிதன் : கருணையே வடிவான ஆண்டவனே.......!
ஏழை எளியோரிடம் இரக்கமுள்ள இறைவா....!
சிறுபான்மை இனத்தவனாக 
சீரழியும் என்னை
பேரினவாதியாக்கு..........

இறைவன் : சரி.....அப்படியே அருளினேன்.

மனிதன் : அடேய் ஆண்டவனே...........
எங்களின் பேரினவாத ஆதிக்கத்தை
அவ்வப்போது எதிர்த்து
எங்களை பீ(பே)திக்குள்ளாக்கும் இந்த
சிறுபான்மையினரை ஒழித்துக்கட்ட வேண்டும்
என்னை அரசியல்வாதியாக்கு..........

கடவுள் காணாமல் போனார்.

No comments:

Post a Comment