Monday, October 22, 2012

அதிசயம் ஆனால் உண்மை


                                       அதிசயம் ஆனால் உண்மை
                ------------------------------------------------



கழிப்பறையில் பாரதியார் படத்தை மாட்டி
களிப்படைந்த கன்னடத்துக் கயவனுக் குத்தன்
மொழிஇனத்தின் மீதான பற்று இந்த
முத்தமிழை விற்றவனுக் கில்லை அதனால்
மொழிஇனத்தின் மானத்தைக் காப்ப தற்கு
முந்துகின்ற அவனைநாம் போற்றவேண் டும்;நம்
மொழிஇனத்தை இழிவுசெயும் எதிரியின் கால்களை
முத்தமிடும் நம்மவனைத் தூற்ற வேண்டும்

வான்புகழும் வள்ளுவனின் புகழைப் போற்ற.
வடித்தார்கள் சிலையொன்றை அவனுக் காக
மானமிகு பெங்களூர்வாழ் தமிழர் ; ஆனால்
மனிதருக்குள்  இனபேதம் கொண்ட அந்த
 கன்னடத்தான் கண்டித்தான் ; எங்கள் ஊரில்
கவின்தமிழுக் கிடமில்லை அதனால் உங்கள்
இனமான வள்ளுவனை மறைப்போம் என்றான்
இரக்கமின்றி சாக்கினிலே மூடி வைத்தான்.

கன்னடத்துக் பைங்கிளியென சரோஜா தேவியை
கதாநாயகி யாய்போற்றி சரணம் பாடி
பொன்பொருளும் மாளிகையும் பேரும் புகழும்
பொங்கித்தான் தின்பதற்கு கறியும் சோறும்
பண்போடும் பரிவோடும் தந்த தெல்லாம்
பாசமுள்ள தமிழ்சினிமா ரசிகன் ஆனால்
தண்ணீரின் பங்கீட்டுக் கெதிராய் அங்கே
சதிகாரி போட்டவேடம் தெரியும் தானே !

தென்னிலங்கைத் தீவினிலே நம்மி னத்தை
திட்டமிட்டு அழிக்கின்றான் சிங்க ளத்தான்
கண்ணெட்டும் தூரத்தில் வாழு கின்ற
கருவாட்டை போலுணர்ச்சி யற்ற அந்த
தென்னாட்டு தமிழனுக்கோ சிந்தை யெல்லாம்
சீரழிக்கும் தமிழ்ச்சினிமா மேலும் அந்த
வண்ணத்திரை நிழலுக்கு கட்அவுட் வைத்து
வார்க்கின்றான் பாலாபி ஷேக மெல்லாம்.

அடைகாத்து அவனினத்தை தமிழ கத்தான்
ஆதரித்து காக்கின்றான் இருந்தும் கூட
விடம்கொண்ட நெஞ்சத்தால் கன்னடத்தான்
விரோதம்ஏன் கொள்கின்றான் தமிழர் மீது
படவுலகில் சிறைபட்டுப் போன இந்த
பைந்தமிழனுக் கவன்தானே ‘’ சூப்பர்ஸ் டாரு ‘’
விடையேதும் தெரியாமல் விழிக்கின் றோம்யாம்
விடைதெரிந்தோர் தயைகூர்ந்து செப்பு வீரா !

(கடந்த 25.11.2007 ம் நாள் மலேசிய நண்பன் எனும் தினசரியில்
தண்ணீர் பங்கீட்டின் காரணமாய் கோபம் கொண்டு பாரதிப்
புலவனின் படத்தை கழிப்பறையில் மாட்டி தங்களின் தமிழின
வெறுப்பை காட்டிய கன்னடக்காரர்களின் செயல் கண்டு மனம்
கொதித்து நான் எழுதி வெளிவந்த கவிதை)

No comments:

Post a Comment