Sunday, October 21, 2012

சே குவேரா


                                       
                                         சே குவேரா
                   _____________
ஆதிக்கவாதிகள்
உன்னை ஒரு
சிறு தீப்பொறி என நினைத்தார்கள்
ஆனால் நீ எரிமலை என்பதை
அவர்கள் அறியாதவர்களாக இருந்தார்கள்.

உன் கண்களைப் பிடுங்கினார்கள்
ஆனால் இப்போது
உலக மக்களின் பார்வையெல்லாம்
உன் மீதுதான்.

உன்னை சிதைத்துப் புதைத்தவர்கள்
திகைத்துப் பதைத்துக் கொண்டிருக்கிறார்கள்
உலக மக்களின் மனத்தில் நீ
மறுபிறவியாய் மலர்ந்திருப்பதைக் கண்டு.

உனக்கெதற்கு கல்லறை………………?
உன் எதிரிகள் அவர்களையும் அறியாமல்
புதைத்தார்கள் உன்னை
உலக மக்களின் மனங்களில்.

நீ செத்து விட்டதாக
உன் எதிரிகள் நினைத்தார்கள்
ஆனால் அந்த அநியாயக்காரர்கள்
அறிந்திருக்க மாட்டார்கள்
நீ உலக மக்களின் சொத்தாய் இருப்பாயென்று…!
            

No comments:

Post a Comment