Wednesday, February 23, 2011

இருட்டடிப்பு

....ராமனும் சீதாப்பிராட்டியும்
தெய்வங்களானார்கள்
இலக்குவனும் பரதனும்
இலட்சிய புருஷர்களானார்கள்

அனுமனின் ஆக்ரமிப்பும்
அங்கீகரிக்கப்பட்டது

வாலியின் வதை என்ற பேரிலான
வன்முறையும் நியாயப்படுத்தப்பட்டது.

ராமர் பாலம் கூட இப்போது
சேது சமுத்திரத்திற்கெதிராக
மானபங்க வழக்கொன்றை
பதிவு செய்திருக்கிறது.

வேடவனின் மகனான வால்மீகியின்
தூரிகை வரைந்த
இந்த இதிகாசப் பதிவுகளை
கற்பனை என்று கூறிய
வாயிற்குரிய நாவையும்
நாவிற்குரிய தலைக்கும்
கண்டனம் தெரிவிக்கப்பட்டு
துண்டிக்கப்பட வேண்டுமென்ற
தண்டனையும் அறிவிக்கப்பட்டாகிவிட்டது.
ஆனால்………………………….!
தமிழ் இராவணனின்
இலங்காபுரியின் இறையாண்மை மட்டும்
இன்றுவரை இருட்டடிப்பு செய்யப்படுகிறதே
ஏன்………………………….
தமிழனின் அடையாளம் அங்கே
தட்டுப்படுவதினாலா……………………..!

No comments:

Post a Comment