Tuesday, February 8, 2011

ஸ்பீனிக்ஸ் பறவையாவோம்

எப்படியோ இருந்தவர்க ளெல்லாம் நாட்டில்
யம்மாடியோவ்எனத்திகைக்கும் வண்ணம் வாழ்வின்
உப்பரிகையில் நிற்கின்றார் ஆனால் நாமோ
உப்புமூட்டை சுமக்கின்றோம் கூலிக ளாக
தப்பென்று தெரிந்திருந்தும் தன்னலம் காக்க
தமிழினத்தின் உரிமைகளை தாரை வார்த்தோம்
ஒப்புக்கு சித்தப்பா வேடம் போட்டோம்
உலகறிய ஒட்டுமொத்த மாகக் கெட்டோம்.

No comments:

Post a Comment