Wednesday, February 23, 2011

கிழக்கு விடியுமா?

அட………என்னாத்தெ செய்வது கடவுளேஇங்கு
இவனோட வாழவும் முடியலே
நல்லதைச் சொன்னா மொறைக்கிறான்இவன்
ஞாயத்தைக் கேட்டால் குரைக்கிறான்
பள்ளத்தைத் தனக்கே தோண்டுறான்இந்த
பாருக்கு பாரமாய் வாழ்கிறான் – (அட……..)

நஞ்சைப் பாலுன்னு குடிக்கிறான்அதை
நஞ்சுன்னு சொன்னா வெடிக்கிறான்
வஞ்சகரின் சூழ்ச்சியில் தேய்கிறான்இவன்
வாயில்லாப் பூச்சியாக வாழ்கிறான். (அட….)

பதவிக்காக இனத்தையே விற்கிறான்கொடும்
பாவிக்கு பல்லக்கு தூக்குறான்
உதைப்பவனைக் கண்டால் மிரளுறான்இவன்
ஓணானைப் போல நிறம் மாறுறான்    (அட…..)

நல்லதைச் சொல்லவும் முடியல்லேஅதை
நாசுக்காய் சொன்னாலும் ஏறலே
கிள்ளினால் அழக்கூடத் தெரியல்லேஇவன்
கிழக்கெப்போ விடியுமுன்னு புரியல்லே.   (அட…..).

No comments:

Post a Comment