Tuesday, November 20, 2012

வன்மம்


                          வன்மம்
                    -------------

இயற்கையன்னையின் விநோதங்களை
தன் சிறகுகளில் ஏந்தி
சுதந்திரம் என்ற சொல்லுக்கு
அர்த்தம் தாங்கி
அடடா………. இது என்ன……….
பறக்கும் மலர்ச் செண்டோ…………!
என என்னை வியப்பில் ஆழ்த்தியது
நடு முதுகில் குண்டூசியால் குத்திப்
படுகொலை செய்யப்பட்டு
கண்காட்சிக்காக கண்ணாடிப் பேழைக்குள்
பிணமாகத் தொங்கவிடப்பட்டிருந்த
அந்த வண்ணாத்துப் பூச்சி.



           

No comments:

Post a Comment