தமிழ்த்தாயின் தங்கை
அறிவைப் பெருக்கிட
அன்பை வளர்த்திட
ஔவையின் பாடலப் பாரு – அது
அள்ளித்தரும் பல நூறு – பல
ஐயம்தரும் புதிர்
ஆய்ந்து தெளிந்திட
அருந்தமிழ் தந்த நற்பேறு – அந்த
அன்னையல்லாமல் வேறு யாரு !
கூனிக் குறுகிய
அறிவைப் பெருக்கிட
அன்பை வளர்த்திட
ஔவையின் பாடலப் பாரு – அது
அள்ளித்தரும் பல நூறு – பல
ஐயம்தரும் புதிர்
ஆய்ந்து தெளிந்திட
அருந்தமிழ் தந்த நற்பேறு – அந்த
அன்னையல்லாமல் வேறு யாரு !
கூனிக் குறுகிய
கோழைகள் மத்தியில்
கோபுர மாய்அவர் நின்றார் – மனக்
கூனல் நிமிர்த்தியே வெண்றார் – பலர்
கோடிப் பணத்தினில்
கூடிக் களிக்கையில்
கூழுக்கு மட்டுமே வாழ்ந்தார் – அவர்
கோன்வளர் கொள்அறம் போந்தார்.
சிந்தையை மூடிய
சிந்தியா மாந்தரை
சிந்திக்க செய்யுளைத் தந்தார் – அவர்
திங்களாய் தமிழ்மனம் நின்றார் _ இனம்
ஆடிக் களித்திட
ஆண்டு செழித்திட
ஔவையாய் அவனியில் வந்தார் – பல
ஆயிரம் தத்துவம் ஈந்தார் !
(சாதி இரண்டொழிய வேறில்லை எனும் ஔவையின் செய்யுளை
சாதி வெறியர்கள் கவனிக்கவும்)
கோபுர மாய்அவர் நின்றார் – மனக்
கூனல் நிமிர்த்தியே வெண்றார் – பலர்
கோடிப் பணத்தினில்
கூடிக் களிக்கையில்
கூழுக்கு மட்டுமே வாழ்ந்தார் – அவர்
கோன்வளர் கொள்அறம் போந்தார்.
சிந்தையை மூடிய
சிந்தியா மாந்தரை
சிந்திக்க செய்யுளைத் தந்தார் – அவர்
திங்களாய் தமிழ்மனம் நின்றார் _ இனம்
ஆடிக் களித்திட
ஆண்டு செழித்திட
ஔவையாய் அவனியில் வந்தார் – பல
ஆயிரம் தத்துவம் ஈந்தார் !
(சாதி இரண்டொழிய வேறில்லை எனும் ஔவையின் செய்யுளை
சாதி வெறியர்கள் கவனிக்கவும்)
No comments:
Post a Comment