Tuesday, March 8, 2011

பெருங்காயம்


உழைத்துத் தேய்ந்த தமிழர்களேஊர்
உலகுக்கு உழைத்த தோழர்களே
களைத்து இளைத்து காய்ந்ததனால்தோல்
கருத்துப் போன மனிதர்களே.

தோட்டத்தில் நம்மின வனவாசம்அது
தொல்லைகள் நிறைந்த சிறைவாசம்
ஊட்டமில் லாசமு தாயமாக நம்மை
உருக்குலைத்த சதிநாசம்.

உள்ளத்தில் சிறிதும் கள்ளமில்லைஉன்
உழைப்பினில் துளியும் வஞ்சமில்லை
எல்லாத் திறமையும் இருந்தும் நீஇங்கு
எந்தத் துறையிலும் உயரவில்லை.

தொலைநோக் கில்லா நிகழ்காலம்உன்
தோல்விக்கு அதுவே நதிமூலம்
பிழைதனைக் கழிதலுன் நிலையானால்இங்கு
பிறந்திடும் உனக்கினிப் பொற்காலம்.

வறுமையே வாழ்க்கை என்றானால்வெறும்
வாய்ச்சவ டாலே விதியானால்
இருபது இருபதில் சமுதாயம்அது
கடலில் கரைத்த பெருங்காயம்.

No comments:

Post a Comment