Tuesday, March 8, 2011

சீச்சீ..........இந்தப் பழம் புளிக்கும்........!


இனத்திற்கு சேவைசெய்ய இயக்கமொன்று அமைப்பதும்
கனமான பதவிக்காக அதன்கழுத்தை நெரிப்பதும்
பதவிமோகம் பிடித்தோருக்குப் பழகிப் போச்சுண்ணே – அதனால்
பொதுத்தொண்டுன்னா ஊர்வம்புன்னு பயமாய் போச்சுண்ணே

தாய்மொழியை எதிர்ப்பதும் சமயம்பார்த்து துதிப்பதும்
ஆய்வுசெய்வ தாகக்கூறி அதற்குவேட்டு வைப்பதும்
வாய்ச்சவடால் வீரர்களுக்கு வழக்க மாச்சுண்ணே – அதனால்
பொதுத்தொண்டே வேணாமுன்னு வெறுத்துப் போச்சுண்ணே.

விருதுகளே குறிக்கோளாய் வேடமிட்டு அலைவதும்
வறுமையான நம்மினத்தை பெயர்போட விற்பதும்
எங்கும் எதிலும் இந்தநோயே பெருகிப் போச்சுண்ணே – அதனால்
பொதுத்தொண்டே வேணாமுன்னு அலுத்துப் போச்சுண்ணே.

சமுதாய ஒற்றுமைக்கு சங்கமொன்று கூட்டுவார்
சாதியங்கு ஒளிந்திருக்க சந்துபொந்து காட்டுவார்
அமுதத்துல நஞ்சுகலந்து நாசமாச்சுண்ணே – அதனால்
அய்யோ சாமி ஆளவுட்டா போதுன்னாச்சிண்ணே.

பணபலத்தைப் பெருக்குதற்கு இனநலத்தை விற்கின்ற
குணங்கெட்டுப் போனவர்கள் கொள்கைபற்றி பேசுவதால்
பொசுங்கி உள்ளம் பத்திகிட்டு எரிஞ்சிப் போச்சுண்ணே – அதனால்
பொதுத்தொண்டே வேணாமுன்னு சலிச்சிப் போச்சுண்ணே.

No comments:

Post a Comment