Tuesday, March 1, 2011

நானும் என் நகல்களும்

சாம பேத தான தண்டத்திற்கேற்றவாறு
‘’நான்’’ எனும் என்னை
நானே செதுக்கிக்கொள்ளும்
அதிசய சிற்பி நான்.

என் தாயின் கருவறையில்
இருந்தது நானில்லை
அது என் நிஜம்.

அனுதினமும் மறவாமல்
நான் சிரசாசனம் செய்கிறேன்
என் கால்கள்
திருடுபோகாமல் இருக்கின்றனவா
என்பதை தெரிந்து கொள்வதற்காக.

ஒவ்வொரு விடியலிலும்
என் பிணம் விழித்தெழும்.

No comments:

Post a Comment