Wednesday, November 28, 2012

தீ


                                             தீ
                 ----

சஞ்சி காலத்தில் அஞ்சி வாழ்ந்த
சஞ்சலம் இன்றும் தொடர்கிறது
நெஞ்சில் வீழ்ந்த பஞ்சத் தீயோ
நிதமும் பற்றி எரிகிறது.

துஞ்சி எழுகிற மஞ்சம் நிலையாய்
துயரச் சந்ததி பெருக்கிறது
பிஞ்சில் பழுத்தே எங்கள் சந்ததி
பஞ்சப் பராரியாய் மடிகிறது

எஞ்சி யிருந்த கொஞ்சப் பெருமையும்
எரிசா ராயத்தில் அழிகிறது
இஞ்சியைத் தின்ற குரங்காய் நம்கதை
இந்த நாட்டில் தொடர்கிறது.

வஞ்சகம் என்று தெரிந்தே சதியில்
வழுக்கி வழுக்கி விழுகிறது
செஞ்சோற் றுக்கடன் தீர்ப்பதைப் போல
கஞ்சியைப் கெஞ்சிப் பெறுகிறது.

No comments:

Post a Comment